திங்கள், 18 மே, 2009

இனியில்லை


இனியில்லை



புத்தபூமியில் இரத்தஆறு பிணநாற்றம்
இனத்தை துடைத்துவிட்டு
அமைதியேற்றும் இறுதிக்கட்டம்
அலறும் உயிர்களை ஆர்ப்பரித்து
அழிக்கும் கடைசி யுத்தம்
இன்றே கடைசி, இனியில்லை, நிம்மதி.
புதைகுழிகளில் கண்ணீருடன்
புதிய நம்பிக்கையில் பணதில் புளரும்
சந்தர்ப்ப யோக்கியர்களை
கையெடுத்து கும்பிட்டு எதிரிகளிடமே
உதவி கேட்ட மிச்ச உயிர்களும்
இன்றுடன் அழிந்துவிடும்
இனி நிம்மதிதானே
எங்கிருந்தோ வந்து பாரதத்தில் நரங்கி
எழுதிசையும் தங்கள் கொடிகளை நாட்டி
பணத்திற்கும் மதத்திற்கும்
பெரியார் வசனம் பேசித்திரிந்து
தமிழ் கொலைகளை செவ்வனே செய்துவந்த
தமிழ் தலைக்களுக்கு வாக்களித்து
கடைசி நம்பிக்கையையும்
கெடுத்து விட்டு நிம்மதியாய்
காலத்தின் முன் மௌன சாட்சிகளாய் நாம்
எங்கே புரியப்போகிறது தமிழின் புனிதம்
எப்படி புரியும் பாரதத்தின் புண்ணியம்
விடுதலை நாளை நமக்கு பிச்சைப்போட்டதாய்
வீதியெங்கும் ஆங்கிலத்தில் பறைசாற்றி
கூட்டம் போட்டு கல்லறைமீது
இராஜ்யம் கட்டுபவர்கள் ஆயிற்றே
எப்படி புரியும் தாங்கள் குடிப்பதும்
பாரதத்தின் இரத்தம் என
இனி தமிழீழத்தில் கிடக்கும் தலையில்லா
பிண்ட கல்லறைகளில் கட்டட்டும்
புதிய இராஜ்யம், நிம்மதி தானே
போவது பெரியார் வழியாம்
கொல்வது பெரியார் கொள்கைகளை
இதுதான் நாம் கற்ற பாடம்
போதியுங்கள் இதை பிள்ளைகளுக்கும்
தந்தை நடந்து வந்த இரத்த வழிகளை
குடும்மாய் அரசியல் குளம் தோண்டி
மக்கள் நாய்களுக்கு எலும்பு பிச்சையிட்டு
சதைகளை தின்று சதைவளர்க்கும்
மாக்கள், வாழிய பல்லாண்டு
இனி உங்கள் இராச்சியம்
நடப்பதெல்லாம் நல்லதற்கு
நடந்ததும் நல்லதற்கு
உயிரும் சுதந்திரம் கேட்ட
மக்களை அழித்தாகிவிட்டது – இனி
கேட்க நாதியில்லை
குரைத்த நாயும் இப்போது சவக்குளிக்குள்
நிம்மதியாய் தூங்கலாம் :'(

சனி, 16 மே, 2009

பேதைப் பெண்ணே



பேதமையால் பிதற்றும்
பேதை பெண்ணே - உன்
மனதை திறந்துபார்.

நிலவின் குளிமை தெரியும்
அதை நோக்கி காத்திருக்கும் உன்
சொந்தங்களின் பாசம் புரியும் அதைவிடுத்து
சாக்கடை வாசம் பிடிக்க நினக்காதே.
பூவிற்கு வாசம் தருபவள் நீ. ஒரு
முள்ளை உள்ளுள் குத்திக்கொள்ளாதே.

கடவுளின் இருப்பிடத்தில்
தாயும் தகப்பனும் வைத்தாய், அதில்
ஏன் ஒரு சாத்தானை சேர்க்கிறாய்
விட்டுவிலகச்சொன்னால் போகமாட்டாய்
அது உன் வயதி்ன் கோலம்

நண்பனாக சொல்கிறேன். கேள்.
உன்னால் பிறர் நோக முடியாது.
பின்னால் என்னால் நீ நோகவும் வேண்டாம்

உன்நடபு கிடைத்திருப்பதே எனக்கு போதும்.
வேண்டாம் என்னால் துன்பம் எப்போதும்

கண்டதையெல்லாம் தொட்டுப்பார்க்கும்
வயசம்மா உனது. -நான்
கண்டுவிட்டேன் இதை எப்போதோ.

நிலவைக்கூட தொட்டுவிட
நினைக்கும் பிஞ்சு உள்ளம்,
உன்னை அறியாமலே அதை
கையோடு சேர்க்க துடிக்கிறதே.
வேண்டமடி என் செல்லமே. செல்லமே.

நான் தனியாகவே அழுது பழக்கப்பட்டவன்.
என் அழுகை உனையழுக்காக்க வேண்டாமே

அன்பினால் அழைத்தேன் செல்லம் என்று
அதையெண்ணி பூரிப்படையாதே

என்னில் கலந்துவிட்டால்
நீ அடைந்ததாத ஒன்றுமே இல்லை மாறாக
நீ இழப்பதோ ஏராளம்.

நீ புனிதவதி. அதை நல்ல
உள்ளத்திற்கு பரிசளி
அந்த நல்லவனுக்கு மதிப்பளி

உனைப்போலவே எதிர்பாத்த்து
காத்திருப்பான் ஒரு சீதையை.
அவனை ஏமாற்றாதே
உன்னை நம்பியிருக்கும் பலரையும்
அழ வைக்காதே.

உன்னை திட்டமாட்டார்கள். நல்லவர்கள்.
தன்னையே மாய்த்துக்கொள்வார்கள்.
வேண்டாமடி செல்லம்

அவர்களுக்கு ஏன் இந்த துரோகம்.
மகளின் மணவாழ்வை மனதார கண்டு
கண்ணயர காத்திருக்கும்
மனங்களை நோகடிக்காதே.

உன்னை மலராய் அர்ச்சிக்க ஒரு
கந்தர்வன் வருவான்
காத்திரு பெண்ணே அதுவரைக்கும்
காத்திரு காலம் வரும் பொறுக்திரு


--------------------
ஒரு இராட்சசிக்கு கொடுத்த அட்வைசு.
வினோத்