செவ்வாய், 29 செப்டம்பர், 2009

என் முதல் காதல் கவிதை

என் முதல் காதல் கவிதை

ஓருயிராய் உடல் வாழ இருகண்களில்
ஈருயிராய் உனைக் கண்டேன் உன்
காதல்உயிர் உதரம் பாய்ந்தது கண்டேன்
பாதிஉயிர் இழந்து நின்றேன் உன்அழகில்

கடலினாழம் கண்ணில் சீரியஒழுக்கம் செயலில்
பனிக்குளுமை பேச்சில் சூரியஒளி அறிவில்
பிரபஞ்ச சாந்தம் மனதில் சத்தியஉறுதி நெஞ்சில்

நீயென் ஸ்வரமாய் மனசின் லயமாய்
உயிரென் ஸ்ருதியாய் அழகின் விருந்தாய்
புன்சிரியின் பூமழையாய் கண்கனவின் பொன்நிறமாய்
பூயிதழ்பனி எழுப்பும் வசந்த வெயிலானாய்

அக்னி சாட்ஷியாய் கைப்பிடித்த நிமிடத்தில்
பிரியாதிருக்க துடித்த கைகளில் ஹோமகுண்ட வெப்பம்
எனக்காக நானும் உனக்காக நானுமென என்னில்
காதல் விளக்கேற்றி தனிமை சாபவிமோசன தேவியானாய்

மலரின் மெல்லிழையாள் நெஞ்சோடு அணைத்து
தலைகோதி நெற்றி முகர்ததில் மின்சாரம் உடல்பாய
மஞ்சள்முகம் செந்தாமரையாய் சிவந்து போக
என்முகம் நெஞ்சில் வாங்கி கண்மூடிநீ

யுகங்களை விழுங்கும் உன்னோடிருந்த நொடிகளில்
ஓர்மழையில் இருகுடைகளாய் நனைந்தோம்
நெஞ்சங்கனிந்த நின்காதல் மொழியில்நான் நெஞ்சமலர்வேன்

இரவேழும் என்உயிர் சேர்ந்த நெஞ்சம்
உலகேழும் எனைக்காணா அலையுமுன் நெஞ்சம்
கணமேழும் விழிவழிநோக்கி காத்திருந்த கண்ணில்
கண்ணீரெழ கண்டதும் என் நெஞ்சம் நனைத்தாய்

கருவுற்றதறிந்து ஓடோடிவந்து ஒவ்வொன்றும் பார்த்துசெய்து
என்முகம் காண ஏங்கவைத்து என்கைபிடித்து வலியில்
மறுபடிபிறந்து காதல் பரிசுஎன் கையளித்தாய்

தாயுன் அன்பிற்கேங்கி தெய்வமே நம்பிள்ளையாய்
தாயுன் அன்பை பகிரமுடியா நானுமொரு பிள்ளையாய்
நம்மிரு கைவெப்பத்தின் நடுவே தாலாட்டி தூங்கினோம்

ஊடலில் பேசாமல் இருந்த நொடிகளில்
தொட்டில் பிள்ளை ஏங்கியழுத கீச்சுக்குரலில்
மாரோடணைக்க முந்திநம் காதல்கடமை செய்தோம்

பிஞ்சுவிரல் ஸ்பரிசத்தில் பிள்ளைமொழி படித்தோம்
உரித்து வைத்திருக்கிறான் அம்மா அப்பாவை
உற்றார் பேச்சில் உளம் மலர்ந்தோம்

பேச்சுகேட்கா பிள்ளையடித்து வலியில்அழ அழுதோம்
”பெற்ற புண்ணியர் யாரோ” ஊர்புகழ அழுதோம்
பூயிட்டு மணமுடித்து மனமார வாழ்த்தி அழுதோம்

நரை தோன்றி வயதுரைக்க நீகேலி.செய்தாய்
நகை தோன்ற, உனைப்பிரியும்நாள் நினைத்துவாட
”தனியே தவிக்க விட்டு போயிடாதீங்க”
உன் பேச்சில் நம் கண்ணில் கண்ணீர்

கண்எட்டும் தூரத்தில் நீ வேண்டும்
கையெட்டும் தூத்தில் உன்நிழல் வேண்டும்
மூச்சுஎட்டும் தூரத்தில் உன்மனம் வேண்டும்
மனமெட்டும் தூரத்தில் உன்உயிர் வேண்டும்

கனவாய் ஒருகாதல் வாழ்க்கை
கலையாமல் ஓர்யுகம் வாழ உனைக்
காணாமல் தவித்து தேடுகிறேன்
கண்டால் நான் கேட்பேன், என்னை
கைப்பிடித்து காதலிக்க உனக்கு சம்மதமா?

வினோத் கன்னியாகுமரி

உலக இதய தினத்திற்கு ஒரு கவிதை

உலக இதய தினத்திற்கு ஒரு கவிதை

என்னைக் கேட்காமலேயே
என் நண்பர்கள், அன்பர்கள்
உற்றோர்கள், உறவினர்கள்
துன்பம் கண்டு துடித்து
இன்பம் கண்டு மலர்ந்த
இதயமே!

கை கை சேர
கண் கண் பார்க்க
இதயம் இதயம் பார்த்து
நண்பர்களை அடையாளம்
காட்டினாய்!

இணைந்த இதயங்கள்
இனிதாய் இடம்பெயரச் செய்தாய்

காததிரும் சொல் கேட்டால்
கண்ணுக்கு முன் நீயழுதாய்

காணும் எல்லா இதயங்களையும்
கனிவாக கேட்டதாகச்சொல்

நீயிருக்கும் காலம் வரை
அன்புக்காகவே துடிப்பேன்
இது சத்தியம்

-- மற்றொரு இதயம்