சனி, 12 டிசம்பர், 2009

கன்னி

கன்னி



விலைமாட்டுக்கு எஜமானியப் பாக்கணுமாம்...
விருந்திற்கு வருகிறதாய் தகவல்.
வெட்கங்கொள்ள நடிக்கிறேன்.....
என்றோ தொலைந்து போனதது
வரவேயில்லை!
தங்கைக்கு பிறகு தானென்று
தன் காதல் இழந்து அண்ணா
வீட்டையிழந்தும் எனக்கான
சேமிப்பை தொடாத அப்பா
கைகாதில் ஏதுமில்லாமல்
மறைக்கப் பழகிய கைகளாய்
மறுத்த நிகழ்ச்சிகளில் அம்மா
எல்லோர் அன்புக்கும் முன்னால்
தன்வாழ்க்கை தலைபட்டு
என் வெட்கம் விட்டுப்போனது என்றோ
அடிமாட்டு பேரம் நடக்கையில்
பெண்ஜென்மம் தீயில் பிணமாய் சிதறி
அடிபணியா மாடு விலகையில்
வீடெங்கும் மாயான அமைதி
விட்டுவிடத் துணிந்தும்
மறுக்கிறது இக்கன்னி உடம்பு
-- வினோத்

வியாழன், 10 டிசம்பர், 2009

தூக்கம்

தூக்கம்


இன்று
தூங்காமல் தூங்க வேண்டிய
கட்டாயத்தில் கண்மூடி நான்
அங்கங்கள் ஒவ்வொன்றாய்
உயிர் செல்ல சிலிர்த்தது ஒரு கணம்

உணர்ந்தேன்
உணர்வுக்குவியல் நெற்றியில் சஞ்சரிக்க
உடலை தூங்கவிட்டு உயி்ர் விழித்தது
உச்சிக்கும் நெற்றிக்குமான காந்த ஆட்டத்தில்
உயிருடன் கலக்க ஆரம்பித்த நிமிடங்கள்

பறந்தேன்
காற்றில் இலைச்சருகாய் - இல்லை
காற்றில் சூறாவளியாய் கிழித்தேன்
காலின் கீழெங்கும் மேகக்கூட்ட
மெத்தையில் நின்று சூரியனை உள்வாங்கி

கண்டேன்
கண்மூடி காணும் காட்சி
கண்ணாடி கண்பதின் தெளிவாய்
எண்பக்கமும் காண்கிறேன் கண்மூடி

உயிர்த்தேன்
தீயின் வெப்பமாய் நீரின் தண்மையாய்
உடலும் உணர்வும் பிரிந்தும் பிரியாமலும்
கனவும் நனவும் கலந்தும் கலக்காமலும்
தெளிவாய் ஒடிய நீரோட்டமாய்

நெளிந்தேன்
நிஜத்தில் நித்திரை கொண்டு
நிஜத்தில் ஒரு புதியமனோ உலகமதில்
உயிர் மட்டும் உலவி உலவி
உணர்வு தத்தளித்து மன உடல் அசைந்து

நினைக்கிறேன்
நான் உறங்குகிறேன் - தெரிகிறது
உடல் உணர்வு - இருக்கிறது
கண்கள் மூட இறந்து
வேற்றுலகில் முளைக்கிறேன்

இனி
எத்தனை நேரம் என்பதறியேன்
இனி தூங்கியாக வேண்டும்
யோக மனமே அமைதி அமைதி
மனம் சொன்ன வினாடியில்
தூங்கிப்போனேன் நான்.

வினோத்
http://tamilnanbargal.com/friends/vinoth

செவ்வாய், 29 செப்டம்பர், 2009

என் முதல் காதல் கவிதை

என் முதல் காதல் கவிதை

ஓருயிராய் உடல் வாழ இருகண்களில்
ஈருயிராய் உனைக் கண்டேன் உன்
காதல்உயிர் உதரம் பாய்ந்தது கண்டேன்
பாதிஉயிர் இழந்து நின்றேன் உன்அழகில்

கடலினாழம் கண்ணில் சீரியஒழுக்கம் செயலில்
பனிக்குளுமை பேச்சில் சூரியஒளி அறிவில்
பிரபஞ்ச சாந்தம் மனதில் சத்தியஉறுதி நெஞ்சில்

நீயென் ஸ்வரமாய் மனசின் லயமாய்
உயிரென் ஸ்ருதியாய் அழகின் விருந்தாய்
புன்சிரியின் பூமழையாய் கண்கனவின் பொன்நிறமாய்
பூயிதழ்பனி எழுப்பும் வசந்த வெயிலானாய்

அக்னி சாட்ஷியாய் கைப்பிடித்த நிமிடத்தில்
பிரியாதிருக்க துடித்த கைகளில் ஹோமகுண்ட வெப்பம்
எனக்காக நானும் உனக்காக நானுமென என்னில்
காதல் விளக்கேற்றி தனிமை சாபவிமோசன தேவியானாய்

மலரின் மெல்லிழையாள் நெஞ்சோடு அணைத்து
தலைகோதி நெற்றி முகர்ததில் மின்சாரம் உடல்பாய
மஞ்சள்முகம் செந்தாமரையாய் சிவந்து போக
என்முகம் நெஞ்சில் வாங்கி கண்மூடிநீ

யுகங்களை விழுங்கும் உன்னோடிருந்த நொடிகளில்
ஓர்மழையில் இருகுடைகளாய் நனைந்தோம்
நெஞ்சங்கனிந்த நின்காதல் மொழியில்நான் நெஞ்சமலர்வேன்

இரவேழும் என்உயிர் சேர்ந்த நெஞ்சம்
உலகேழும் எனைக்காணா அலையுமுன் நெஞ்சம்
கணமேழும் விழிவழிநோக்கி காத்திருந்த கண்ணில்
கண்ணீரெழ கண்டதும் என் நெஞ்சம் நனைத்தாய்

கருவுற்றதறிந்து ஓடோடிவந்து ஒவ்வொன்றும் பார்த்துசெய்து
என்முகம் காண ஏங்கவைத்து என்கைபிடித்து வலியில்
மறுபடிபிறந்து காதல் பரிசுஎன் கையளித்தாய்

தாயுன் அன்பிற்கேங்கி தெய்வமே நம்பிள்ளையாய்
தாயுன் அன்பை பகிரமுடியா நானுமொரு பிள்ளையாய்
நம்மிரு கைவெப்பத்தின் நடுவே தாலாட்டி தூங்கினோம்

ஊடலில் பேசாமல் இருந்த நொடிகளில்
தொட்டில் பிள்ளை ஏங்கியழுத கீச்சுக்குரலில்
மாரோடணைக்க முந்திநம் காதல்கடமை செய்தோம்

பிஞ்சுவிரல் ஸ்பரிசத்தில் பிள்ளைமொழி படித்தோம்
உரித்து வைத்திருக்கிறான் அம்மா அப்பாவை
உற்றார் பேச்சில் உளம் மலர்ந்தோம்

பேச்சுகேட்கா பிள்ளையடித்து வலியில்அழ அழுதோம்
”பெற்ற புண்ணியர் யாரோ” ஊர்புகழ அழுதோம்
பூயிட்டு மணமுடித்து மனமார வாழ்த்தி அழுதோம்

நரை தோன்றி வயதுரைக்க நீகேலி.செய்தாய்
நகை தோன்ற, உனைப்பிரியும்நாள் நினைத்துவாட
”தனியே தவிக்க விட்டு போயிடாதீங்க”
உன் பேச்சில் நம் கண்ணில் கண்ணீர்

கண்எட்டும் தூரத்தில் நீ வேண்டும்
கையெட்டும் தூத்தில் உன்நிழல் வேண்டும்
மூச்சுஎட்டும் தூரத்தில் உன்மனம் வேண்டும்
மனமெட்டும் தூரத்தில் உன்உயிர் வேண்டும்

கனவாய் ஒருகாதல் வாழ்க்கை
கலையாமல் ஓர்யுகம் வாழ உனைக்
காணாமல் தவித்து தேடுகிறேன்
கண்டால் நான் கேட்பேன், என்னை
கைப்பிடித்து காதலிக்க உனக்கு சம்மதமா?

வினோத் கன்னியாகுமரி

உலக இதய தினத்திற்கு ஒரு கவிதை

உலக இதய தினத்திற்கு ஒரு கவிதை

என்னைக் கேட்காமலேயே
என் நண்பர்கள், அன்பர்கள்
உற்றோர்கள், உறவினர்கள்
துன்பம் கண்டு துடித்து
இன்பம் கண்டு மலர்ந்த
இதயமே!

கை கை சேர
கண் கண் பார்க்க
இதயம் இதயம் பார்த்து
நண்பர்களை அடையாளம்
காட்டினாய்!

இணைந்த இதயங்கள்
இனிதாய் இடம்பெயரச் செய்தாய்

காததிரும் சொல் கேட்டால்
கண்ணுக்கு முன் நீயழுதாய்

காணும் எல்லா இதயங்களையும்
கனிவாக கேட்டதாகச்சொல்

நீயிருக்கும் காலம் வரை
அன்புக்காகவே துடிப்பேன்
இது சத்தியம்

-- மற்றொரு இதயம்

திங்கள், 18 மே, 2009

இனியில்லை


இனியில்லை



புத்தபூமியில் இரத்தஆறு பிணநாற்றம்
இனத்தை துடைத்துவிட்டு
அமைதியேற்றும் இறுதிக்கட்டம்
அலறும் உயிர்களை ஆர்ப்பரித்து
அழிக்கும் கடைசி யுத்தம்
இன்றே கடைசி, இனியில்லை, நிம்மதி.
புதைகுழிகளில் கண்ணீருடன்
புதிய நம்பிக்கையில் பணதில் புளரும்
சந்தர்ப்ப யோக்கியர்களை
கையெடுத்து கும்பிட்டு எதிரிகளிடமே
உதவி கேட்ட மிச்ச உயிர்களும்
இன்றுடன் அழிந்துவிடும்
இனி நிம்மதிதானே
எங்கிருந்தோ வந்து பாரதத்தில் நரங்கி
எழுதிசையும் தங்கள் கொடிகளை நாட்டி
பணத்திற்கும் மதத்திற்கும்
பெரியார் வசனம் பேசித்திரிந்து
தமிழ் கொலைகளை செவ்வனே செய்துவந்த
தமிழ் தலைக்களுக்கு வாக்களித்து
கடைசி நம்பிக்கையையும்
கெடுத்து விட்டு நிம்மதியாய்
காலத்தின் முன் மௌன சாட்சிகளாய் நாம்
எங்கே புரியப்போகிறது தமிழின் புனிதம்
எப்படி புரியும் பாரதத்தின் புண்ணியம்
விடுதலை நாளை நமக்கு பிச்சைப்போட்டதாய்
வீதியெங்கும் ஆங்கிலத்தில் பறைசாற்றி
கூட்டம் போட்டு கல்லறைமீது
இராஜ்யம் கட்டுபவர்கள் ஆயிற்றே
எப்படி புரியும் தாங்கள் குடிப்பதும்
பாரதத்தின் இரத்தம் என
இனி தமிழீழத்தில் கிடக்கும் தலையில்லா
பிண்ட கல்லறைகளில் கட்டட்டும்
புதிய இராஜ்யம், நிம்மதி தானே
போவது பெரியார் வழியாம்
கொல்வது பெரியார் கொள்கைகளை
இதுதான் நாம் கற்ற பாடம்
போதியுங்கள் இதை பிள்ளைகளுக்கும்
தந்தை நடந்து வந்த இரத்த வழிகளை
குடும்மாய் அரசியல் குளம் தோண்டி
மக்கள் நாய்களுக்கு எலும்பு பிச்சையிட்டு
சதைகளை தின்று சதைவளர்க்கும்
மாக்கள், வாழிய பல்லாண்டு
இனி உங்கள் இராச்சியம்
நடப்பதெல்லாம் நல்லதற்கு
நடந்ததும் நல்லதற்கு
உயிரும் சுதந்திரம் கேட்ட
மக்களை அழித்தாகிவிட்டது – இனி
கேட்க நாதியில்லை
குரைத்த நாயும் இப்போது சவக்குளிக்குள்
நிம்மதியாய் தூங்கலாம் :'(

சனி, 16 மே, 2009

பேதைப் பெண்ணே



பேதமையால் பிதற்றும்
பேதை பெண்ணே - உன்
மனதை திறந்துபார்.

நிலவின் குளிமை தெரியும்
அதை நோக்கி காத்திருக்கும் உன்
சொந்தங்களின் பாசம் புரியும் அதைவிடுத்து
சாக்கடை வாசம் பிடிக்க நினக்காதே.
பூவிற்கு வாசம் தருபவள் நீ. ஒரு
முள்ளை உள்ளுள் குத்திக்கொள்ளாதே.

கடவுளின் இருப்பிடத்தில்
தாயும் தகப்பனும் வைத்தாய், அதில்
ஏன் ஒரு சாத்தானை சேர்க்கிறாய்
விட்டுவிலகச்சொன்னால் போகமாட்டாய்
அது உன் வயதி்ன் கோலம்

நண்பனாக சொல்கிறேன். கேள்.
உன்னால் பிறர் நோக முடியாது.
பின்னால் என்னால் நீ நோகவும் வேண்டாம்

உன்நடபு கிடைத்திருப்பதே எனக்கு போதும்.
வேண்டாம் என்னால் துன்பம் எப்போதும்

கண்டதையெல்லாம் தொட்டுப்பார்க்கும்
வயசம்மா உனது. -நான்
கண்டுவிட்டேன் இதை எப்போதோ.

நிலவைக்கூட தொட்டுவிட
நினைக்கும் பிஞ்சு உள்ளம்,
உன்னை அறியாமலே அதை
கையோடு சேர்க்க துடிக்கிறதே.
வேண்டமடி என் செல்லமே. செல்லமே.

நான் தனியாகவே அழுது பழக்கப்பட்டவன்.
என் அழுகை உனையழுக்காக்க வேண்டாமே

அன்பினால் அழைத்தேன் செல்லம் என்று
அதையெண்ணி பூரிப்படையாதே

என்னில் கலந்துவிட்டால்
நீ அடைந்ததாத ஒன்றுமே இல்லை மாறாக
நீ இழப்பதோ ஏராளம்.

நீ புனிதவதி. அதை நல்ல
உள்ளத்திற்கு பரிசளி
அந்த நல்லவனுக்கு மதிப்பளி

உனைப்போலவே எதிர்பாத்த்து
காத்திருப்பான் ஒரு சீதையை.
அவனை ஏமாற்றாதே
உன்னை நம்பியிருக்கும் பலரையும்
அழ வைக்காதே.

உன்னை திட்டமாட்டார்கள். நல்லவர்கள்.
தன்னையே மாய்த்துக்கொள்வார்கள்.
வேண்டாமடி செல்லம்

அவர்களுக்கு ஏன் இந்த துரோகம்.
மகளின் மணவாழ்வை மனதார கண்டு
கண்ணயர காத்திருக்கும்
மனங்களை நோகடிக்காதே.

உன்னை மலராய் அர்ச்சிக்க ஒரு
கந்தர்வன் வருவான்
காத்திரு பெண்ணே அதுவரைக்கும்
காத்திரு காலம் வரும் பொறுக்திரு


--------------------
ஒரு இராட்சசிக்கு கொடுத்த அட்வைசு.
வினோத்

புதன், 21 ஜனவரி, 2009

நா வளத்த மகராசா

நா வளத்த மகராசா

ஆடியில காத்தடிச்சா ஐப்பசில மழ வரும்
ஆடியில அடிச்சகாத்து மழைக்காக காத்திருக்கு
தெங்காத்து திரும்பிவந்து வாடக்காத்தா வீசும்
ஒங்காத்து எப்பவரும் காத்திருக்கேன் நாட்கணக்கா
கடம் வாங்கி படிக்க வைச்சேன் கம்யூட்டர் கத்துக்கிட்டான்
கடங்காறன் காத்திருக்கான் பத்திரமும் கையோட
கப்பலேறி பட்டணம்தாந் போனபுள்ள திரும்பல
கண்ணுவச்சு காத்திருக்கேன் வற்ர தடம் தெரியல
--
வெள்ளப்பய கொண்டுவந்த இங்கிலீஸு பேசிகிட்டா
மாறணச்சு நான் கொடுத்த ஏன் தமிழு மறந்துபோச்சா?
நூறு கோடி பேருக்கே இந்த மண்ணு படியளக்கும்
ஒருவா சோத்துக்கா அங்க வேல பாக்கணும்?
வளத்தேன் மகராசனா ஒனக்கென்னக் கொறயும் வச்சேன்
ஓம் மொகம் பாத்து கண்ணுறங்க கொடுத்து வைக்கலியே
--
நான் வளத்த கண்ணுகாலி எங்கூட நிக்குதப்பா
நேரம்பாத்து எழுப்பிவிட சேவலிங்கே நிக்குதப்பா
நாயா ஒளச்சொளச்சு தேய்ஞ்சுப்போச்சு ஏன்ஒடம்பு
நாளைக்கே செத்துப்புட்டா கொள்ளிவைக்க நாதியில்ல
வாய்க்கா வரப்போரம் இங்க ஜீவனும் ஏங்குதப்பா
கண்ணுல தண்ணி தீருமுன்னே வந்து சேருபுள்ள
வினோத்