தோளில் துவர்த்திட்டு குளிக்கப் போகும் போதும்
தோதாய் முகத்தில் சாந்திட்டு பொட்டுவைத்து
அவன் ஆளை எதிர்பார்த்து வந்தவனை அவள் வருமுன்னே
தலைசிலுப்பி நெற்றிகலைத்து குளத்தில் தள்ளியது.
மழையா? அம்மா வீட்டு முற்றத்துவழியா
மழைத் தண்ணி ஓடுதம்மா, மண்வெட்டி ஏடு.
மழைமுத்துக்கள் உடல்நனைக்க
மழைநிற்கும் வரை வரப்பு வைக்கும் நான்
குட்டிக்கரண குளியல் இடைவெளியில்
கட்டிய ஒற்றைத்துணியைக்கழற்றி
மீன் பிடிக்கையில் அவளும் குளிக்க வர
மீனோடு ஆற்றில் குதித்தது
ஐஸ். ஐஸ். அன்று எல்லோருக்கும்
என் மண் உண்டியல் உலுக்கி தொளிந்தவற்றில்
எல்லோருக்கும் ஐஸ் வர, சண்டையிட்ட தங்கையிடம்
என் ஜஸை அல்லது காசை திருப்பித்தா கேட்டது.
இவையெல்லம் இனிமுடியாதென்று ஞாபகப்படுத்தியது
இன்று அலுவலக ஜன்னலோரமாய் நிற்க
தள்ளுவண்டிக்காரன் பஞ்சுமிட்டாய்
தள்ளிக்கொண்டு போனதைக் கண்டபோது.
--
வினோத்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக