சனி, 3 மார்ச், 2007

விழித்தெழு

விழித்தெழு

மனதை ஆழ்மயக்கத்திலாக்கி தன்

மனத்தின் தேவையெல்லாம் ஓதி
மாயை ஏவப்பட்டவர்களாய் நாம்

அடக்க வந்தவரை அறிந்திலர்
அடங்கியபின்னும் அறிந்திலர்
அடக்கியவர் பின் ஒளியும் கன்றாய் நாம்

கையில் அவருடை அடையாளம்
கழுத்திலும் அவருடை அடையாளம்
காணாமல் கண்டதுபோல் கண்கள்

விழித்தெழுங்கள் விழிகளே
விழித்தெழுங்கள் – இது தூக்கத்தில்
நடக்கும நேரமல்ல

எழுந்து சொல்வோம் விழித்துவிடு – மனதில்
எழும் தீயாக சொல் நான் அடிமையில்லை
எவரேனும் இனிவந்தால் அடக்கிவிடு சொல்லிவை

நம் மனம் நமக்கு மட்டுமே சொந்தம்
ஓடும் உயிரோடையில் நாமும் ஓடவேண்டா
மனம் திரும்புவோம் மனம் தெளிந்து

அடுத்தவர் விளையாட மனம்இது களமல்ல
அகண்ட பிரம்மமதில் நாம் விளையாடி
அகரத்தை பிரம்மமாக்கும் வேள்விக்களம்

வேள்வியில் வெளிவந்ததைக் கொண்டால்
வேழத்தையும் அடக்கலாம் வேதமும் வேண்டா
வேகாமல் அழியுமுன் முக்கண்ணை வேகவை


--

வினோத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக