என்னைஎன்னவென்று எண்ணாமல்
என்னையெடுத்துரைக்கும் எண்ணமெல்லாம்
ஏனோவென்று எண்ணிய காலங்களில்
ஏனோ எண்ணத்தோன்றவில்லை எண்ணுவதற்கு
என்னை என்னவென்று எண்ணித்தோன்றி
என்னை யெண்ணாமல் இருந்த எண்ணங்களெல்லாம்
எண்ணியெண்ணி எண்ணாமாட்டாத
எண்ணத்தால் அழிந்ததுவே
அழிந்ததும் அழிந்ததா, மெய்யோயென்றிருந்த
அகத்தையும் அழித்து விட்டேயழிந்தது
அகமெல்லாம் வெறுமை நிறைந்தது போல்
அகமும் புறமும் அழிந்ததுபோல் எண்ணம்
எண்ணத் தோன்றவில்லை எண்ணமும் தோன்றவில்லை
எல்லாமே ஓய்ந்தது எண்ணாதிருக்க எண்ணிய நாள்.
எங்கும் நிசப்தம். நிலைத்திருக்க நினைத்தபோது எண்ணித்தொடங்கியிருந்தேன் நான்
மறுபடி
வினோத்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக