எங்கள் வயிற்றில் பிறப்பவன்
சிங்கத்தை வாட்டப் போகும்
தமிழனென்பதால் அழித்தாயா மூடனே.
இதோ நாங்கள் சூழுரைக்கின்றோம்
நாங்கள் வளர்ந்து வாழ்க்கைப்பட்டு
தாயாக தமிழன் கரு சுமந்து
அவன் பிறந்து உன்னையழிக்க
நெடுகாலம் ஆகுமடா.
நன்று செய்தாய் மூடனே.
இன்றே வருகிறோம்.
தமிழச்சி கருவில் ஆணாக.
தமிழ்தாய் நாட்டையாழ
நாங்கள் வளரும் காலத்தை குறைத்தாயடா
நாட்களை எண்ணிக்கொள்ளடா.
எங்கள் தாயின் உதிரம் குடித்த உனக்கு
எங்கள் கையால் தானடா சாவு.
இது செஞ்சோலை செல்வங்களின் சூழுரை...
--
வினோத்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக