சனி, 3 மார்ச், 2007

நடந்ததெல்லாம்


நடந்ததெல்லாம் நன்றாகவே நடந்தது.
எரிமலைஅனல் நன்மைக்கு?
ஆழியின் சீற்றம் நன்மைக்கு?
அணுகுண்டின் தீவிரவாதம் நன்மைக்கு?
மனதின் மதவாதம் நன்மைக்கு?
ஆம்...அழிக்கவேண்டியவைகளை
அழித்து விட்டால்
நடந்ததெல்லாம் நன்மைக்கு!
நடப்பதுஉம் நன்மைக்கு!?

மந்திரவாதம் மூடம்!
மனவியலும் ஜொதிடமும் மூடம்..
சக்தி செறிவித்தல் அறிவுவாதமாம்.
பிரார்த்திப்பதும் அறிவுவாதமாம்.

அறியாததெல்லாம் மாந்தற்ரு
அறிவிலிகளின் மூடநம்பிக்கை
அறியத்தந்தால் அவர்கள் அறிவாளிகளென்று
அடிபணிந்திடுவர்
அ. அ. என்று கேட்டிருப்பர்
நம்மக்கள் அவர்கள் தம் பேச்சை

ஆத்திரம் அழிப்பதில்லை
ஆத்திரப்படும் உயிர் அழிப்பதுபோல்
அழிந்துவிடுதோ
ஆன்மாவும் அழிவதில்லை
அதையறியா ஆன்மாக்கள்
காலத்தின் ஓட்டத்தில்
கலந்துவிடுமோ

உயிர் உயிரையழிக்கிறது என்றால்
நம்முயிரான இயற்கையும் ஏன் அழிக்கவேண்டும்
அழிக்கத்தெரியும்.
கட்டைளையை நிறைவேற்றிவிடுகிறது
கனகச்சிதமாக.
அடங்கிவிடு என்றால்?...
அடங்குமா அழித்தெறியுமா

எல்லோரும் அக்கரைக்கு படையெடுத்தால்
கடல் என்ன வழிவிடுமா.
கடலிடம் கேட்கவேண்டும்!

மனிதக்கூக்குரல் இயற்கைக்கென்ன
கேட்கவாச்செய்யும்
எறும்பின் கூக்குரல் நமக்கென்ன
கேட்டுக்கொண்டா இருக்கிறது.

அழிந்துபோகட்டும்
அழியவேண்டுபவைகள்
அழியவேண்டாமென்றால்
அழியுமுன் தன்னை தனதாக்கிக்கொள்

சக்தி செறிவித்தல் - Energy Healing.....

--
வினோத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக