சனி, 3 மார்ச், 2007

நாளை.


போற்றிப்பாடும் தேவையறிந்து
போற்றினேனே. போற்றிபோற்றி.
மீணடுமென் ஊனக்கண்ணிலொரு ஒளிவட்டம்!
கைய்யேந்தியழைத்தேன், அப்பா...
என்ன கருணையடா உனக்கெனயழுதேன்.
கையில் விழுந்தது என்னவோ.
ஆமது, ஒற்றை வட்டநாணயம்!

எதற்கெடா?
கண்ணிழந்த பாவியெனக்கு நாணயமெதற்கடா.
கூன்நரைகாலத்தில் இதற்காகவோ
காலுமில்லாபாவிநான் உன்மலரடிநோக்கிதவழ்ந்தேன் ?

ஊன்வளர்க்க உணவுவேண்டேன்
பொருள்வளர்க்க வலிவுவேண்டேன்
பேர்வளர்க்க பிள்ளைவேண்டேன்
தானம்வளர்க்க தனம்வேண்டேன்
யார்க்குவேண்டாதவனெனக்கு நீதானடா வேண்டும்.
ஆமப்பா. உன்தாழ்மட்டுமடா.
உன்தாழ்மட்டும்போதுமடா.

--
வினோத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக