சனி, 3 மார்ச், 2007

என்னவள்.

என்னவள்.

நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன். அவள் என்னை காதலிக்கிறாளா என அறிய வேண்டும்.
என்ன பண்ணலாம்? நேராகச்சென்று பேசிவிடலாமா? இல்லை மெயில் பண்ணலாமா? ஒன்றுமே
தோன்றவில்லை. வெறுப்பாய் இருந்தது. இந்த இடத்தில் எப்படி இருக்க? எந்திர உலகம்.
அவரவர் பாட்டுக்கு எதையோ செய்து கொண்டிருக்கிறார்கள். யாரிடம் கேட்க?
அடிக்கடி அவள் வருவாள். கேட்டுவிடலாமா என்று தோன்றும். அதோ அவள் வருகிறாள்.
அவளேதான். என்னைப்பார்த்துதான் வருகிறாள். எனக்குத்தெரியும். வந்துவிட்டாள்.
இல்லையில்லை. என்னிடம் வரவில்லை. பக்கத்தில் இருந்தவரிடம் வந்தாள். பேசினாள்.
"என்ன சார், இன்னிக்கு உங்க ஆளு கனவில வந்தாங்களா? இந்தா, இத சாப்பிட்டுட்டு
படுங்க. கனவில உங்க ஆளு கண்டிப்பாக வருவாங்க." என்று ஏதோ கொஞ்சம் மருந்தை அவர்
வாயில் விட்டுவிட்டு மருந்து பெட்டியை எடுத்துக்கொண்டு நடந்தாள். "அப்பப்பா,
இந்த பைத்தியங்ககிட்ட பேசி மருந்து கொடுத்து முடியுமுன்ன எனக்கு பைத்தியம்
பிடிக்கும் போல இருக்கு" பேசிக்கொண்டே போய்க்கொண்டிருந்தாள்
என்னவள்..........

சும்மா.......... நேரம் போகல. அதான்............ ;);)

2 கருத்துகள்: