அழிவில்லை என்றும் அழிவில்லை
அகமாக ஆனவனையறிந்தவற்கு அழிவில்லை
அழியாததொன்றுமில்லா அவனைத்தவிர
அவனாகிய நம் ஆன்மாவைத்தவிர
ஆன்மாவிற்கு வினையில்லை கர்மவினையில்லை
ஆனாலும் அரக்கைத்தொட்ட கைபோல்
மாயாபந்தத்தினால் வினை தொடரும்
ஆன்மாவில் வந்து ஒட்டிக்கொள்ளும்
இப்போதிருப்பது நிஜமல்ல கர்மவினையறுக்க வந்தஇடம்
தற்போதிருப்பதை நீக்கிவிட்டு ஓடுவாரும் உளர்
அப்போதே சேர்த்துவைப்பாரும் உளர்
எப்போதும் நல்வினைசெய்வாரும் உளர்
கொள்வது நம்பிக்கையாம் அது இறைமேலாம்
கொண்டதும் இறைவாராவி்டாலும் மனம் இயங்கிவிடும்
கொண்டது நற்கோணத்திலானால்
கொள்ளவேண்டிய வினைகளை விதைத்துவிடும்
வினையது நம்மனத்தைக் கையிலெடுத்து
வினைகளை தொடரவிடும் மனமும் அதுபோல் எண்ணும்
விடமுடியாமல் புறத்தடிநோக்கி அங்குமிங்கும் ஓடுவர்
அகத்தாலணையும் அகம் அறியாதார்
எல்லாவினையும் நாமறியலாம்
வரும்வினையும் வந்தவினையும் நாமறியலாம்
மூலக்கனல் கொண்டு எவ்வினையையும் பொசுக்கலாம்
மூர்த்தியும் தெளியலாம் பொகுக்கியபின்
பொசுக்கியபின் சித்தம் தெளியவரும்
போக்கும் வரவும் தெளிந்துவிடும்
செய்வதறிந்து செய்தால் வினையொட்டா
செய்வதெல்லாம் நல்வினையாகுமே
வினோத்
அது அருமை வினோத்!
பதிலளிநீக்குஅன்பிற்கு நன்றி ஐயா..
பதிலளிநீக்கு